உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வாரத்தினை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய காவற்துறையினர் மற்றும் முப்படையினர் இணைந்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலன்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதான தேவாலயங்களில் மற்றும் இனங்காணப்பட்ட சில பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் உயிர்த்த ஞாயிறு வாரம் பூராவும் அமலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.