நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி குறித்த கூட்டம் மகிந்த தேசப்பிரிய தலமையில் இடம்பெவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 25ம் திகதி நைபெறவிருந்த பொதுத்தேர்தல் கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் பொதுத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர், சுகதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தலினை நடாத்தும் தினம் குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில் பல அரசியல் வாதிகள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றமையாலேயே குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.