கொழும்பு செய்தியாளர் –
இலங்கையில் காவற்துறை ஊரங்குச்சட்டத்தை தளர்த்தக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும், கொரோனாவின் வீரியம் குறைந்ததது தான் இலங்கையில் காணப்படுகின்றது.
நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களிலும், தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தவர்களாக காணப்படுகின்றனர்.
இன்னொருபுறம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் பெருமளவு இல்லாமல் போயுள்ளது.
தேயிலைத்துறை 40 வீத வீழ்ச்சி கண்டுள்ளது.
எனவே நாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் கொரோனா பரவாத வகையிலான ஏற்பாட்டுடன் ஊரடங்குச்சட்டத்தை கட்டுப்பாட்டுடன் தளர்த்த நடவடிக்கை எடுத்துவருவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.
அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மற்றும் தனியார் பிரிவின் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊரியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன், 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அடுத்தவாரம் முதல் பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.