இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 1643 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1643 பேரில் 811 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், மேலும் 821 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் 10 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்ட 6 பேரும் கடற்படையினர் இருவரும் அடங்குவதாக சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.