இலங்கையிலுள்ள பலருடைய பெயர்களும் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த நபர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது .
அத்துடன் இவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நிலையில் இலங்கை அரசு அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது.
இதற்கமைய குறித்த பட்டியலில் தடைசெய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட சிலர் இலங்கையிலும் வசித்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் அவர்களை இலங்கை அரசு நாடு கடத்துமா? என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் ஊடகங்கள் கேட்டபோது,
“அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.