பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,இன்று இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகின்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கு அமைய குறித்த வியஜத்தினை மேற்கொண்டுள்ளார் .
அத்துடன் இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்க உள்ளார்.
மேலும் முதலீட்டு மன்றம் மற்றும் வர்த்தக விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர்மட்ட ஈடுபாடுகள் பற்றியும் திட்டமிடப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு தலைமை தாங்குவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .