ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை அம்பாறை நிந்தவூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
குறித்த பிரசவம் அம்பாறை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாயார் நேற்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு பிரசவத்திலு 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
குறித்த பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும் 2 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ள நிலையில் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெண் குழந்தை 2620 கிராம், மற்றும் ஆண் குழந்தைகள் தலா 2410 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.