இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன்கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் நாளை காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இன்று மாலை வேளையில் அம்பாறை மாவட்டத்தில் மழைபெய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.