நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமையை கவனத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு புதிய சேவையை வழங்க முன்வந்துள்ளது.
அதனடிப்படையில் இதன்படி இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கை மக்களுக்காக மிலானில் உள்ள இலங்கை உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.
அத்துடன் தேவையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, கொவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் வகையில்ரோம் மற்றும் மிலானுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளும் நடாத்தப்படும்.
மேலும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் பொது மக்களுக்குகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளிலும் கூடதொடர்ந்தும் சேவைகளை வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .