விகாரைகளை குறி வைத்து குற்ற விசாரணை அதிகாரிகள் என தம்மை கூறிய சிலர் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் பல வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இவ்வாறு திட்டம் போட்டு கொள்ளை இட்டுச் செல்லும் நபர்கள் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண நேற்றைய தினம் தெரிவித்துள்ளார் .
அத்துடன் கதிர்காமத்தில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு நேற்றைய தினம் சென்ற இருவர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி குறித்த விகாரையின் விகாரதிபதியை அச்சுறுத்தி கையடக்க தொலைபேசி மற்றும் பெறுமதி நிறைந்த புத்தர் சிலையொன்றினையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் .
மேலும் இதேபோன்று நேற்று முன்தினமும் அவுங்கல்ல காவற்துறை பிரிவில் பலபிட்டிய – பாத்தேகம விகாரைக்கு வருகை தந்த குழுவொன்று மேல்மாகாண குற்ற விசாரணைப்பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்தி அங்கிருந்த விகாரையின் விகாரதிபதியிடம் பணத்தை கொள்ளையிட முயச்சித்து பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.