அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் பொத்துவில்- சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அப் பகுதி மக்கள் நிலநடுக்கத்தினை என்மேல் உணரக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர் .