மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில்,நித்திரையில் இருந்த யுவதி ஒருவரை இன்று அதிகாலை வேளையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
காதான்குடி காவற்பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கிய போதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.