இன்று(01) முதல் எதிர்வரும் 5ம் திகதிவரை நாட்டிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
வருகின்ற உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கருத்தில் கொண்டு இவ்விஷேட பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவும் நினைவு கூரப்படவுள்ளது.
இதற்காக பிரதான பாதுகாப்பு திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தும் அதேநேரம் இராணுவம் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்துவார்கள் எனவும் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.