யாழ்ப்பாணம்- கண்டி (ஏ9) பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.