நாட்டில் ஏற்படுகின்ற கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என
காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளகாவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன :தங்கச்சங்கிலி கொள்ளைகள் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் பெண்கள் அனைவரும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்
.
இந்நிலையில் நேற்று மாத்திரம் நான்கு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது .மேலும் ஹபராதுவ, அக்மீமன மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் மற்றும் வென்னப்புவ பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்துள்ள இனந்தெரியாத நபர்களிருவர், 67 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்நிலையில், நேற்று பொரலஸ்கமுவ காவற்துறையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்
கஹத்துட்டுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுள்ளது .
இதனைத்தொடர்ந்து, சந்தேக நபரான இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, பிளியந்தல, கஹாத்துட்டுவ மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும், ஏழு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தகவலகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்போது கொள்ளையிட்டதாக கருதப்படும் 4 தங்கச் சங்கிலிகளும், தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்படி கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .