சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.இந்த ஆண்டு ஐபில் தொடரிலும் இருந்து விலகி கொண்டார்.
இந்நிலையில் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னாவை இன்று அதிகாலை மும்பை காவல்துறை கைது செய்தது. மும்பை விமான நிலையத்தின் அருகில் உள்ள தனியார் கிளப்பில் ரெய்னாவைக் கைது செய்த காவலர்கள், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி தனியார் கிளப் இயங்கியதாலும் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததாலும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிளப்பில் இருந்த சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சுசானே கான், பாடகர் குரு ரந்தாவா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டார்கள். பிறகு ரெய்னா, சுசானே ஆகியோரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.