உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8171 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனாவால் இதுவரை 5598 பேர் உயிரிழந்த நிலையில், 95,527 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2362 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30,108 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 23,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,170 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேபோல் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 20,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 523 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8,746 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.