நேற்று நள்ளிரவு அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
விநாயகபுரம் 3 பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துச்சாமி கருப்பாயி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் முற்றத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படுமென காவல்துறையினர் தெரிவித்தனர்