யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ம.மயூரன் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேற்படி இருவரையும் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அகில இலங்கை காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில் அதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வி.மணிவண்ணன், பா.மயூரன் தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த தடைக்கு எதிராக, இகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் மாகாண குடியியில் மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையை செல்லுபடியற்றதாக்க அவர்கள் கோரியிருந்த நிலையில், குறித்த மனுவை மாகாண குடியியல் மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது