திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், குறித்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகள் ஐவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்படி அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இவ்வகையில், கடந்த மூன்று தினங்களில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.