நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றார் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்சமயம் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வகையில் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 94,253 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.