வடக்கில் அண்மைக்காலமாக கொரோனா நிலமை தீவிரமடைந்து வரும் நிலையில், யாழ் நகரினைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (05) யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெற்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
மேலும், செவ்வாய்க்கிழமை பெற்ற மாதிரிகளின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும். அதன் பின்னரேயே யாழ்.நகர் வர்த்தக நிலையங்களைத் திறப்பதா? மூடுவதா என்று தீர்மானிக்கப்படும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.