கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் தொடர்பில் பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சில வேளைகளில் குறிப்பின்றி அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய நிலமைக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி எவ்வாறாயினும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில், சுகாதார அமைச்சினால் இப்புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே கொரோனா நிலமைகளை கட்டுப்படுத்தும் வகையில் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.