இன்று (02) அதிகாலை பன்னிபிடிய, பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தலவத்துகொடயில் இருந்து வந்த மோட்டார் வாகனமொன்று பொல்கொடுவ வீதிக்கு திரும்ப முற்பட்ட போது பன்னிப்பிட்டி பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்குள்ளானவர்கள் யடியாந்தோட்டை, மல்லகொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என்ற இளைஞர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.