சீனாவின் எட்டு மொபைல் செயலிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்தார். இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறும் போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார்.
சம்பந்தப்பட்ட செயலி நிறுவனங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், அமெரிக்கா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடக்குவதாகவும் கூறினார்.