அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பின நபரின் மரணத்தையடுத்து வெடித்துள்ள தீவிரப் போராட்டத்தால் ஆண்ட் ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீட்டை கூகுள் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
ஜூன் 3 ஆம் தேதி இணையவழி மூலம் இடம்பெறவிருந்த இந்த அறிமுக விழாவில், புதிய இயங்குதளத்தின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் உள்ளிட்ட பல சாதனங்களையும் அறிமுகம் செய்வதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் பல்வேறு இடங்கள்ளில் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதன் காரணமாக ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீட்டை ஒத்தி வைத்துள்ள கூகுள் நிறுவனம் இது தொடர்பிலான அடுத்தக்கட்ட தகவல்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.