அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பொலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுமையாக பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிகள் நடந்துவருகின்றன. இதனால் அமெரிக்காவின் சில பகுதிகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
நேற்றிரவு, அப்படி Minneapolis நெடுஞ்சாலை ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் திடீரென அச்சுறுத்தும் வகையில் ட்ரக் ஒன்று நுழைந்தது. புயல் வேகத்தில் வந்த ட்ரக்கைக் கண்டு மக்கள் அச்சத்தில் அலறியடித்து சிதறியோடினர்.
பின்னர், பேரணிக்காக திரண்டிருந்த மக்களே ட்ரக்கின் மீது ஏறி, அதை நிறுத்தினர். அதற்குப்பின்தான் தெரிந்தது, அந்த ட்ரக்கை ஓட்டி வந்தவர் ஒரு வெள்ளை இனத்தவர்.
பின்னர் பொலிஸார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அவர், காயங்கள் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த ட்ரக்கின் சாரதி ஏன் இப்படி செய்தார் என்பது தெரியாவிட்டாலும், அவர் வேண்டுமென்றேதான் கூட்டத்திற்குள் ட்ரக்கை செலுத்தினாற்போல் தோன்றுகிறது என்கின்றனர் பொலிசார்.