உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா தற்போதுவரை முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 53 ஆயிரத்தைக் தாண்டியுள்ளது.
கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து11 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து 7 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடடத்தக்கது.